சென்னை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: அதிமுக உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில் ஏப்ரல் 5 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் கடந்த மே 4 முதல் பெறப்படுகின்றன.
இந்நிலையில், கழகத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து தருமாறு மாவட்ட செயலாளர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கேட்டுக்கொண்டதால் வரும் 31ம் தேதி மாலை 5 மணிவரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதி வாய்ப்பாகும். புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை பெற்றுள்ளவர்கள் மட்டுமே, கழக பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், அமைப்பு தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள்.