சென்னை: ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது எனவும் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படாது எனவும் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. வெள்ளைத்தாளில் சுயவிவரங்கள் ஏதும் தரவேண்டியதில்லை எனவும் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் எனவும் குடும்ப அட்டைதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.