மும்பை: ரஞ்சி போட்டிக்கான முதல் பரிசுத் தொகை ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1 கோடி பரிசுத் தொகை ரூ.3 கோடியாக அதிகரித்துள்ளது. பல்வேறு கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கி வந்த பரிசுத் தொகைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உயர்த்தியுள்ளது.