Wednesday, May 22, 2024
Home » ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 355 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 355 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்

by Mahaprabhu

சென்னை: போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: இன்று ஏப்.10ம் தேதி, ஏப்.12ம் தேதி (வெள்ளிக் கிழமை) ஏப்.13ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் ஏப்.14ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 315 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை அன்று 290 பேருந்துகளும், ஏப்.13ம் தேதி 340 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஏப்.10, 12 மற்றும் 13ம் தேதிகளில் ஆகிய மூன்று நாட்களுக்கு 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 315 பேருந்துகளும், ஏப்.12ம் தேதி 290 பேருந்துகளும், ஏப்.13ம் தேதி 340 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து இன்று 40 பேருந்துகளும், 12ம் தேதி 40 பேருந்துகளும், 13ம் தேதி 40 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் புதன் கிழமை அன்று 7,878 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 6,610 பயணிகளும் சனிக்கிழமை 4,143 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 11,375 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi