Friday, May 10, 2024
Home » கைதானவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்

கைதானவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்

by Dhanush Kumar

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களையும், பறிமுதல் செய்த விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து பாக் ஜலசந்தி கடலில் நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இவைகள் காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை மீனவர்கள் நடமாட்டமின்றி களையிழந்து காணப்படுகிறது.

You may also like

Leave a Comment

six + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi