Thursday, May 16, 2024
Home » ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு

ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு

by Suresh

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 21ம் தேதி கைதான 25 பேரில் ஒருவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதும் அவ்வப்போது விடுதலை செய்யப்படுவது தொடந்து நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 25 பேர் 3 விசைப் படகுகளில் நெடுந்தீவு அருகே மார்ச் 21ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்தது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 25 பேரையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய இலங்கை கடற்படையினர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது 25 பேரையும் ஏப்ரல் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பேரில் 24 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு படகோட்டி மட்டும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட 3 விசைப் படகுகளில் இருவர் படகுகளுக்கு உரிமையாளராக இருப்பதால் விசைப் படகுகளை அரசுடைமையாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். மற்றொருவர் படகின் உரிமையாளர் இல்லாதவர் என்பதால் இந்த வழக்கு அடுத்த மாதம் நடைபெறும் எனவும் படகை இயக்கி வந்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

4 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi