Thursday, May 30, 2024
Home » ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயின் கழுத்தை இறுக்கி கொன்ற மகன், மகள் அதிரடி கைது!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயின் கழுத்தை இறுக்கி கொன்ற மகன், மகள் அதிரடி கைது!

by Francis

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வலையர்வாடி நாடார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். மீனவரான இவர் மங்களூருவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயா (52). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். திருமணமாகி மூத்த மகள் ராமேஸ்வரத்தில் வசித்து வருகிறார். மற்றொரு மகள் திவ்யா, அவரது கணவர் ராஜூ, திவ்யாவின் தம்பி வேல்முருகன் ஆகியோர் நாடார் குடியிருப்பில் வசிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக ஜெயா தனது மகன், மகள் ஆகியோரை அவதூறு பேசி வந்தார். இதனால், அவர்கள் ஜெயாவை கண்டித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு குளித்து கொண்டிருந்த ஜெயா மகன், மகளை மீண்டும் அவதூறாக பேசினார். இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அவர்கள் ஜெயாவை தள்ளிவிட்டதில் தலையில் காயமடைந்த ஜெயா, மேலும் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆவேசமடைந்த வேல்முருகன், திவ்யா, ராஜூ ஆகியோர் சேர்ந்து துணியால் ஜெயாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

ஜெயா இயற்கையாக இறந்ததாக இக்கொலையை மறைக்க முயன்றனர். அச்சமடைந்த வேல்முருகன், மண்டபம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரியிடம் நேரில் ஆஜராகி கொலை சம்பவத்தின் உண்மை தன்மையை கூறி சரணடைந்தார். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், வேல்முருகன் (23), திவ்யா (26), ராஜூ (31) ஆகியோர் மீது கொலை உள்பட 2 பிரிவுகளின் கீழ் மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

15 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi