Saturday, July 27, 2024
Home » நகராட்சிக்கு இருக்கும் அதிகாரம் கூட மாநிலங்களுக்கு இல்ல: அனைத்தையும் பறித்து விட்டார்கள்; ஒன்றிய அரசை சாடிய ராமதாஸ்

நகராட்சிக்கு இருக்கும் அதிகாரம் கூட மாநிலங்களுக்கு இல்ல: அனைத்தையும் பறித்து விட்டார்கள்; ஒன்றிய அரசை சாடிய ராமதாஸ்

by Karthik Yash

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் பாமக இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் விழுப்புரத்தில் நேற்று நடந்த பாமக பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ‘தமிழகத்தில் பல பிரச்னைகளுக்காக நாம் போராடி வருகிறோம். 370 சாதிகள் உள்ளது. கல்வி, பொருளாதாரம் என அனைத்து வகைகளும் சமநிலை அவர்களுக்கு கிடைப்பதில்லை. சமநிலை என்றால் என்ன?. எல்லோருக்கும் சமூக நீதி கொடுத்திட வேண்டும். விழுப்புரம் மாவட்டம் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டம். மாநில உரிமைகள் பாதுகாத்திட வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலம் முதல் மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சிக்கு இருக்கும் அதிகாரம் கூட மாநிலங்களுக்கு கிடையாது. அனைத்தையும் பறித்து விட்டார்கள்.

பின்னர் எப்படி மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம் கொடுக்க முடியும். அம்பானி வீட்டுப் பிள்ளைகளுக்கு கிடைக்கும் கல்வி இங்கிருக்கும் சுப்பன் வீட்டு பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை. 22 தேசிய மொழிகளில் அந்தந்த பகுதிகளில் பேசும் மாநிலங்களில் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம். விவசாயிகள் விளைபொருளுக்கான உரிய விலை கிடைக்கவில்லை. 19 வேளாண் நிழல் பட்ஜெட்டுகளை பாமக வெளியிட்டுள்ளது. நான் எந்த காலத்திலும் பதவி சுகத்தை அனுபவிக்கவில்லை. அதற்காக ஆசைப்பட்டதும் கிடையாது. கடைசி வரை மக்களுக்காக மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறேன்,’ என்றார். மாநிலங்களின் அதிகாரத்தை பறித்த ஒன்றிய அரசை ராமதாஸ் விமர்சித்து பேசியிருப்பது பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

* முதுகில் குத்தியதற்கு ஆதாரம் இருக்கு… தேர்தலுக்கு பின் வரும்: கே.சி.வீரமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஏ.சி.சண்முகம்
புதிய நீதி கட்சி தலைவரும் பாஜ கூட்டணி கட்சியின் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வட்பாளருமான ஏ.சி.சண்முகம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2014ல் தாமரை சின்னத்தில் நிற்கும்போது, 3 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பெற்றேன். பின்னர் வேலூரை பாஜவுக்கு கொடுக்காமல் அதிமுகவிற்கு கொடுத்தார்கள். எடப்பாடியும், ஓபிஎஸ்சும் இணைந்து தாமரையிலேய இவ்வளவு வாக்கு வாங்கியுள்ளீர்கள். எனவே தாய்வீட்டு சீதனமாக இரட்டை இலையில் நிற்க கூறினார்கள். தேர்தல் களத்தில் இறங்கினோம். அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் உயிரை கொடுத்து வேலை செய்தார்கள்.

ஆனால், ஒரே ஒருவர் (முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி) எந்தெந்த தொலைபேசியில் எங்ெகங்கு பேசினார் என்று அத்தனை ஆதாரங்களும் உள்ளது. 1 லட்சம் வாக்குகளை கொடுத்து அதிமுகவின் முதுகில் குத்தியவர் அவர் தான். வாணியம்பாடியில் கடந்த தேர்தலில் தாமரைக்கும், இரட்டை இலைக்கும் 1,800 வாக்குகள் தான் வித்தியாசம். ஆனால் 2019ல் நடந்த தேர்தலில் 23 ஆயிரம் வாக்குகள் குறைவு, நானே இரட்டை இலையில் நிற்கிறேன். இதற்கு காரணம் வாணியம்பாடியில் முதுகில் குத்தியவர் தான். நான் ஒன்றிய அமைச்சராகிவிடுவேன் என்று பழிவாங்கப்பட்டேன், அதிமுக வரலாற்றில் ஒரே ஒருவர் என்னை தோற்கடித்தார். எல்லா ஆதாரங்களும் உள்ளது. இதற்கு சாட்சி வேலூர், வாணியம்பாடி தான். மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம்கள் தேர்தலுக்கு பின்னரும் தொடரும்.

* நிர்வாகிகளுக்கு 10 சவரன் நகை: அதிமுக மாஜி அமைச்சர்கள் போட்டி போட்டு அறிவிப்பு
திருப்பத்தூர் பகுதியில் நேற்று திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கலிய பெருமாள் அறிமுகக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டம் மதியம் 1 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என்று கூடியிருந்தனர். வருவார்கள், வந்துவிடுவார்கள் என்று காத்திருந்த நிலையில் மாலை 4 மணியான நிலையிலும் மாஜி அமைச்சர்கள் வராததால், தனியார் மண்டபத்தில் காத்திருந்த நிர்வாகிகள் பசி, தாகத்தால் மண்டபத்திற்கு உள்ேளயும், வெளியேயும் சென்றபடி இருந்தனர். பின்னர் மாலை 4.30 மணிக்குத்தான் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமசந்திரன் மற்றும் வேட்பாளரும் தாமதமாக வந்திறங்கினர். பின்னர் நடந்த கூட்டத்தில், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் திடீரென, மேடையில் அமர்ந்திருந்த மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக மண்டியிட்டு தரையில் விழுந்து வணங்கினார். இதனை பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தாலும் மேடையில் இருந்த நிர்வாகிகள் கைதட்டி ரசித்தனர். சிறிதுநேர சலசலப்புக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ‘கடந்த முறை நான் போட்டியிட்டு தோற்றுவிட்டேன். இந்த முறை கலியபெருமாளை வெற்றி ெபற செய்ய வேண்டும். 6 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளருக்கு அதிக வாக்குகள் எந்த தொகுதியில் பெற்றுக் கொடுத்தாலும் அந்த தொகுதிக்கு 5 சவரன் நகை கொடுப்பேன் என்றார். அதன்பிறகு பேசிய மாஜி அமைச்சர் ேக.சி. வீரமணி, நானும் 5 சவரன் நகை என்று மொத்தமாக சேர்த்து 10 சவரன் நகை கொடுப்பேன். இந்த போட்டியில் வெல்லப்போவது திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை தொகுதி தான். இந்த 10 சவரன் நகை கிளை கழகத்திற்கு வழங்கப்படும், என்றார். வீரமணி பேசி முடிப்பதற்குள், ரத்தத்தின் ரத்தங்கள், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில ஆயிரம் கிளை கழகம் இருக்குது. இதுல 10 சவரன் நகையை கிள்ளி கொடுப்பார்களா? இல்லை, தங்க பஸ்பம் போல கொடுப்பார்களா என்று முணுமுணுத்தபடி சென்றனர்.

* திலகவதியா? திலகபாமா? திண்டுக்கல் சீனிவாசன் ‘கன்ப்யூஸ்’
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்ய திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் வந்திருந்தார். அப்போது பாமக சார்பில் வேட்பாளர் திலகபாமா வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது, திண்டுக்கல் சீனிவாசன் ‘‘வாம்மா திலகவதி (திலகபாமா) நல்லா இருக்கிறீங்களா? கடந்த முறை உங்கள் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டேன். இப்போது இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறேன்’’ என, கூறினார். அதற்கு திலகபாமா ‘‘ஆமாண்ணே உங்களுக்கு வாழ்த்துக்கள்’’ என கூறிவிட்டு சிறிது தூரம் சென்றார்.

You may also like

Leave a Comment

seven − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi