சென்னை : ராம நவமியை முன்னிட்டு யாத்திரை செல்ல அனுமதிக் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை காரணம் கூறி யாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏப். 12 முதல் 17 வரை கேரளாவின் மலப்புரத்தில் இருந்து குமரி மாவட்டம் களியக்காவிளை வரை யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.