மும்பை: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக அஜிங்கியா ரகானே விளையாடி வருகிறார். இவர் வரும் ஜூன் 7ம் தேதி நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அணியில் ஓரங்கட்டப்பட்ட ரகானே, திடீரென அணியில் சேர்க்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்தது. இதற்கு ஐபிஎல்லில் இவர் ஆடும் அதிரடி ஆட்டமே காரணமென கூறப்பட்டது.
ஆனால், அதை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மறுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் திறமையாக விளையாடியதற்காக, அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. நிறைய பேர் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அது காரணமல்ல. ரகானே கடந்த 6 மாதங்களாக முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி 600 ரன்கள் வரை குவித்துள்ளார். நல்ல பார்மில் இருப்பதால்தான் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்’’ என்றார்.