புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இருந்து இந்தாண்டு 68 எம்பி.க்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் ஆம் ஆத்மியை சேர்ந்த சஞ்சய் சிங், நரைன் குப்தா மற்றும் சுஷில் குமார் குப்தாவின் பதவிக்காலம் வரும் 27ம் தேதியுடனும் சிக்கிமில் உள்ள ஒரேயொரு மாநிலங்களவை எம்பி.யான ஹிஷே லச்சுங்காவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 23ம் தேதியுடனும் முடிவடைகிறது.
ஒன்றிய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், மன்சுக் மாண்டவியா, நாராயண் ராணே பர்ஷோட்டம் ரூபலா, இணையமைச்சர் கள் முரளீதரன், , தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் எல். முருகன் ஆகியோரது பதவிக்காலம் இந்தாண்டு முடிவடைகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் எம்பி பதவியும் முடிவுக்கு வர உள்ளது.