பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் பாஸ்போர்ட்டை முடக்க பரிந்துரை செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.