டெல்லி : மக்களவைக்குள் பாதுகாப்பை மீறி நுழைந்து, வண்ணப் புகை வெளியேற்றக்கூடியமர்ம பொருளை வீசிய இளைஞர் மற்றும் பெண்ணை மடக்கிப் பிடித்து டெல்லி போலீசார் கைது செய்த நிலையில், தற்போது நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. இதைத்தொடர்ந்து பேசிய மக்களவை துணை சபாநாயகர் ராஜேந்திர அகர்வால், நிச்சயமாக நாடாளுமன்ற பாதுகாப்பில் குறைபாடு உள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளார்.