புதுடெல்லி: ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பியான ஜோதி மிர்தா, சுவாய் சிங் சவுத்ரி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தனர். இது குறித்து மாநில பாஜ பொது செயலாளர் அருண் சிங் கூறுகையில்,‘‘ஜோதி மிர்தா மற்றும் சுவாய் சிங் சவுத்ரி வருகையினால் பாஜ குடும்பம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு தலைவர்களையும் வரவேற்கிறோம்” என்றனர்.