Sunday, June 2, 2024
Home » நெல்லை மண்ணில் எழுப்புவது இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றும் குரல்

நெல்லை மண்ணில் எழுப்புவது இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றும் குரல்

by Lakshmipathi

*அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

நெல்லை : நெல்லை மண்ணில் எழுப்பும் குரல் இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்கும் குரலாக ஒலிக்கும் என நெல்லை நாங்குநேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு பேசினார்.நெல்லை அருகே நாங்குநேரியில் நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோரை ஆதரித்து நடந்த இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு பேசியதாவது:

மக்களவைத் தேர்தல் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய தேர்தலாகும். இந்த நெல்லை மண்ணில் எழுப்பக் கூடிய குரல் இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றும் குரலாக ஒலிக்கும். நெல்லை, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகள், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் என 3 தொகுதிகளையும் வென்று முதல்வரிடம் ஒப்படைப்போம். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

கூட்டத்தில் நெல்லை மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் பேசுகையில், ‘நெல்லை மிக சிறப்பு மிக்க பல்வேறு வளங்கள் கொண்ட மாவட்டமாகும்.
இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பெயரைக் கேட்டால் மோடிக்கு தூக்கம் வராது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைய தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் ேவட்பாளர் விஜய் வசந்த் பேசுகையில், தமிழ்நாடு முதல்வரின் மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம் முத்தான திட்டமாகும். இந்தியா கூட்டணி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதிகளிலும் இந்திய கூட்டணி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் நல்லாட்சி அமையும்’ என்றார்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் பேசுகையில், ‘சமூக நீதியை நிலை நாட்ட இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் விளவங்கோடு தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்’ என்றார்.கூட்டத்தில் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், ஞானதிரவியம் எம்பி, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்ேபான்ஸ், மாவட்ட செயலாளர்கள் நெல்லை கிழக்கு ஆவுடையப்பன்,

கன்னியாகுமரி கிழக்கு மகேஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் நெல்லை மத்திய மாவட்டம் டிபிஎம் மைதீன்கான், தென்காசி தெற்கு ஜெயபாலன், எம்எல்ஏக்கள் அப்துல்வஹாப், ரூபி மனோகரன், ராஜேஷ்குமார், பிரின்ஸ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நல வாரிய தலைவர் விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ, மாவட்ட ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம் பெல், முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, ஏஎல்எஸ் லெட்சுமணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் பிரபாகரன், பேச்சிபாண்டியன், சித்திக், பாளை.

ஊராட்சி ஒன்றிய சேர்மனும், ஒன்றிய செயலாளருமான கேஎஸ் தங்கப்பாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், வேலன்குளம் கண்ணன், மாநில தொண்டரணி துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட துணை செயலாளர் எஸ்வி சுரேஷ், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் வக்கீல் நவ்ஷாத், தலைவர் முகம்மது அலி, வக்கீல் அணி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் செல்வசூடாமணி, துணை அமைப்பாளர் தவசிராஜன்,

ஒன்றிய திமுக செயலாளர்கள் நாங்குநேரி மேற்கு சுடலைக்கண்ணு, கிழக்கு ஆரோக்கிய எட்வின், களக்காடு செல்வ கருணாநிதி, பிசி ராஜன், ராதாபுரம் ஜோசப் பெல்சி, வள்ளியூர் ராஜா ஞானதிரவியம், பாளை. வடக்கு வேலன்குளம் முருகன், காங்கிரஸ் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ராம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எல்கேஎஸ் மீரான், மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகம்மது அலி,

மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பாளை பாருக், மாவட்ட துணை செயலாளர்கள் வீரை அப்துல், முகம்மது இஸ்மாயில், சிறுபான்மை ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி செல்வராஜ், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை செயலாளரும், கீழநத்தம் பஞ். தலைவருமான அணுராதா ரவிமுருகன், ஆமீனா சாதிக், ரம்ஜான் அலி, ஆஸாத் பாதுஷா, பெரோஸ் கான், சாலி மௌலானா உள்ளிட்ட திமுகவினர், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

twelve − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi