தூத்துக்குடி: மழை வெள்ளம் பாதித்த தூத்துக்குடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்து வருகிறார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அண்ணா நகரில் இபிஎஸ் ஆய்வு செய்து வருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.