சென்னை: வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை பூங்கா வரை இயக்குவது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4.3 கிமீ தொலைவுக்கு 4 வது புதிய பாதை அமைக்கும் திட்டத்துக்கு நடப்பாண்டின் மத்திய பட்ஜெட்டில் ரூ. 96.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளை விரைவில் தொடங்க முடிவெடுத்த ரயில்வே நிர்வாகம் சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் சென்னை கடற்கரை- சேப்பாக்கம் பறக்கும் ரயில் சேவை ஜனவரி 31ம் தேதி வரை 7 மாதங்களுக்கு வேளச்சேரி முதல் சேப்பாக்கம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க ரயில் இயக்கத்தை சிந்தாதிரிப்பேட்டை அல்லது பூங்கா வரை நீட்டிப்பு செய்வது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.