செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பொதுமக்களை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு முருகேசனார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில், நான்தான் பெரிய ரவுடி எனக்கூறி, பொதுமக்களை நேற்று மிரட்டியுள்ளார். இதனால், அங்கிருந்து பயணிகள் அலறியடித்தவாறு ஓடினர்.
தகவலறிந்த செங்கல்பட்டு நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை மிரட்டிய மணிகண்டனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், மணிகண்டன் ஏற்கனவே இரண்டு கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் மணிகண்டனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.