Tuesday, May 14, 2024
Home » ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங். சார்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் வழங்கினார்

ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங். சார்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் வழங்கினார்

by Suresh

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக கொண்டாடினர். ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கியும், வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும் கொண்டாடினர். இந்நிலையில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ராகுல்காந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் தலைமையில், 114வது வட்டம் பெரிய தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, சேப்பாக்கம் தலைவர் தணிகாசலம் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுப்பேட்டை பன்னீர் செல்வம், பாலா ஏற்பாட்டில் காங்கிரஸ் கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோன்று, திருவல்லிக்கேணி மேற்கு தலைவர் எம்.ஜாஹீருதீன் முன்னிலையில் முத்தையா தெருவில் காங்கிரஸ் கொடி ஏற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், சூளைமேடு சண்முகனார் சாலை கில்நகர் பார்க்கில் ஆயிரம் விளக்கு தலைவர் கராத்தே ஆர்.செல்வம், கவுன்சிலர் சுகன்யா செல்வம் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி, குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆயிரம் விளக்கு ஏ.ஜி.மணி முன்னிலையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மதியம் பிரியாணி வழங்கப்பட்டது.

துறைமுகம் பகுதியில் நிர்வாகிகள் கருப்பையா, செல்லப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் காளிகாம்பாள் கோவில் சிறப்பு பூஜை, கந்தகோட்டம் முருகன் கோவில் தங்க தேர் பவனி நடத்தப்பட்டது. இதேபோன்று மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

15 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi