புதுடெல்லி: டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள், மாவட்டம் மற்றும் மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் ராகுல் காந்தி வாட்ஸ்அப் சேனலை நேற்று தொடங்கி வைத்தார். முதலில் அவர் வாட்ஸ்அப் சேனலில் சேர்ந்ததாக தெரிவித்த லவ்லி, 42 லட்சம் பேர் சேனலில் சேர்ந்திருப்பதாக கூறினார். இதன் மூலம், ராகுலின் அன்றாட சமூக வலைதள பதிவுகள் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்க்கலாம் என்று அவர் கூறினார்.