டெல்லி : உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி எம்பியாக தொடர்வார் என்றும் மீண்டும் நாடாளுமன்றம் செல்வார் என்றும் கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். ராகுல்காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் வாபஸ் தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்த திட்டமிட உள்ளதாக கூறப்படுகிறது.