Tuesday, May 14, 2024
Home » கத்தார் விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு விமான பயணிகள் 336 பேர் உயிர்தப்பினர்

கத்தார் விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு விமான பயணிகள் 336 பேர் உயிர்தப்பினர்

by Arun Kumar
Published: Last Updated on

சென்னை: கத்தார் நாட்டு தலைநகர் தோகா செல்லும், கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத்தொடங்கியபோது திடீர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் நிறுத்தப்பட்டது. இதனால், 336 பயணிகள் உயிர் தப்பினர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, கத்தார் நாட்டு தலைநகர் தோகா செல்லும், கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு புறப்படத் தயாரானது. விமானத்தில் 324 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உட்பட 336 பேர் இருந்தனர்.

அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது. அப்போது, இயந்திரக்கோளாறு விமானத்தில் உள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்நிலையில் விமானத்தை வானில் எடுத்து செல்வது ஆபத்து என்று நினைத்த விமானி, அதை ஓடு பாதையில் அவசர அவசரமாக நிறுத்தினார். மேலும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து விமானம் இழுவை வாகனம் மூலம், புறப்பட்ட இடத்துக்கே இழுத்து வந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தை பழுதுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விமானம், காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

பயணிகளுக்கு உணவு, சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால் விமானத்தை பழுதுபார்க்கும் பணி பிற்பகல் வரை முடியவில்லை. இதையடுத்து, விமானம் ரத்துசெய்வதாக அறிவிக்கப்பட்டது. பயணிகள் 324 பேரை, விமான நிலையத்திலிருந்து சொகுசுபேருந்துகளில் ஏற்றி சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானம் மீண்டும், இன்று காலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்தார் சொல்ல வேண்டிய 324 பயணிகள், சென்னை நகர ஓட்டல்களில் உள்ளனர். அதேநேரத்தில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறை, விமானி தகுந்தநேரத்தில் கண்டுபிடித்து, உடனடி எடுத்த நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் பயணம்செய்த 324 பயணிகள் உட்பட 336 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இச்சம்பவம் குறித்து விமான நிலைய உயர் அதிகாரிகள் மட்டத்தில் தீவிர விசாரணை நடந்துவருகிறது.

You may also like

Leave a Comment

nine + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi