சென்னை: பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் மற்றும் பஞ்சாப் மாநில வளர்ச்சிக்கு பிரகாஷ் சிங் பாதல் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவில் இருக்கும். பிரகாஷ் சிங் பாதலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.