சென்னை: மான நஷ்ட ஈடு வழக்கில் வேறு ஒரு தேதியில் ஆஜராக உள்ளதாக சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. சாட்சியம் பதிவுசெய்வதற்காக நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவதாக கூறிய நிலையில் பழனிசாமி ஆஜராகவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய மேத்யூ சாமுவேல் மீது பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் ரூ.1.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் சாட்சியம் பதிவுசெய்வதற்காக பழனிசாமி மாஸ்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.