புதுடெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 93வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் விதமாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.