கம்பம்: தேனி மாவட்டம், கம்பம், கெஞ்சயன்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பிரவீன்குமார்(24), ஜீப் டிரைவர். இவருக்கு 6 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் ஓட்டு போட்டு விட்டு, மாலையில் தனது நண்பர்களுடன் வண்ணான்துறை பெரியாற்றில் குளிக்கச் சென்றார். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற பிரவீன்குமார் மேலே வர முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.