புதுக்கோட்டை,நவ.4: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி. இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் செல்வகணபதி என்பவர் டிரைவராக உள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை அடுத்த முத்துடையான்பட்டியில் உள்ள குவாரி ஒன்றில் செல்வகணபதி லாரி மூலம் கிராவல் மண் ஏற்றி கொண்டு மணமேல்குடி நோக்கி சென்றுள்ளார். அப்போது லாரி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்புறம் உள்ள சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
தடுப்பு சுவரிலேயே சிறிது தூரம் லாரி சென்று விபத்துக்குள்ளானது. அதிகாலையில் நடந்த இந்த விபத்து பேருந்து நிலைய பகுதியில் கடை நடத்துபவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவற்றில் மோதிய டிப்பர் லாரியில் இருந்து கிராவல் மண்ணை பொக்லேன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பு சுவரில் மோதி நின்றது