புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகார ரத்து விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவக் கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்து இந்தாண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் ஆளுநர் தமிழிசை கூறினார்.