சென்னை: பொது அமைதி பாதிக்கப்படும் சூழலில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா தெரிவித்துள்ளார். டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதினார். தேவையின்றி குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.