சென்னை: பொதுமக்கள் அரசு பேருந்துகளில், இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். “பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் முன்வைத்து கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது அதிமுக ஆட்சியில்தான். கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிற்சங்கங்களிடம் அவகாசம் கேட்டுள்ளோம். தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.பொங்கல் நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.