புதுக்கோட்டை: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணைக்காக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.