மதுராந்தகம்: வெளிக்காடு ஊராட்சியில் பேராசிரியர் அன்பழகன் 102வது பிறந்தநாள் விழா திமுக கட்சி கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாப்பட்டது. பேராசிரியர் அன்பழகன் தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டில் திமுக அரசின் அமைச்சரவையில் நிதி, கல்வி, சுகாதாரம், சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும், திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கலைஞரின் 75 ஆண்டுகால நண்பராக இருந்தவர். அவரது 102வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் பெரிய வெளிக்காடு ஊராட்சி சார்பில் பேராசிரியர் அன்பழகன் 102வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும், ஊராட்சி மன்ற தலைவருமான வெளிக்காடு ஏழுமலை, பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, திமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், லத்தூர் வடக்கு ஒன்றிய அவை தலைவர் லோகநாதன், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக முன்னோடிகள், உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.