டெல்லி: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கை குறித்து ஆலோசிக்க விவசாய சங்கங்களுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு அழைத்துள்ளது. எல்லையில் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்திவரும் நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும் அர்ஜுன் முண்டா பதிவிட்டுள்ளார்.