சென்னை: 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் கூடுதலாக 400 இடங்கள் கிடைக்கும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை, பெரம்பலூர், ஈரோடில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.