சென்னை: தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என விதிகள் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம வசூலித்ததாக வழக்கு தொடரபட்டது. தனி குழு விசாரணை நடத்தியதில் பள்ளியில் உரிய கட்டணம் மட்டுமே வசூலிக்கபடுவது தெரியவந்தாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.