திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இரங்கல் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்றார். இரங்கல் கூட்டத்தில் அவர் பேசும்போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் போலீசார் தாமாகவே முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதையடுத்து வழக்கை ரத்து செய்த போலீசார், கைப்பற்றிய மைக் செட்டை உரிமையாளரிடம் திருப்பி கொடுத்தனர்.