சிலிண்டர் விலையை பிரதமர் மோடி ரூ.100 குறைத்து இருப்பது தேர்தல் நாடகம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை மேலும் ரூ.500 உயர்த்தி விடுவார்கள். திருவண்ணாமலைக்காக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் கூறியுள்ளார்.