பெய்ஜிங்: பிரதமர் மோடி கடந்த சனியன்று அருணாச்சலப்பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்ட இருவழி சுரங்கப்பாதையான சேலா சுரங்க பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி அருணாச்சலப்பிரதேசத்துக்கு வருகை புரிந்தற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘‘அருணாச்சலப்பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதி என்று நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இந்திய தலைவர் வருகை தந்ததில் சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனை எதிர்க்கிறது” என்றார்.