டெல்லி : விஜயகாந்த் மறைவின்போது இரங்கல் மட்டும் தெரிவித்த மோடி, நேற்று தமிழ்நாடு வந்தபோது அவரை புகழ்ந்து பேசினார். திருச்சி விழாவில் பேசியதை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்திலும் விஜயகாந்தை புகழ்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி.தேமுதிக வாக்கு வங்கியை குறி வைத்தே பிரதமர், கட்டுரை வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பா.ஜ.க. தலைவர்கள் எந்த மேடையில் பேசினாலும் வாக்குகளையே குறிவைப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.