டெல்லி : நாடாளுமன்ற அனுமதி இன்றி எவ்வித சட்ட ஒப்புதலுமின்றி பிரதமர் இவ்வளவு பெரிய அளவில் எப்படி நிதி திரட்ட முடியும்? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி ரகசியமாக செலவிடப்படுவதாக செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.