சென்னை : பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.