கன்னியாகுமரி: மாற்றி பேசுவது பிரதமர் மோடிக்கு கைவந்த கலை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியது குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார். அப்போது, கடந்த காலத்தில் இதே பிரதமர் தான் இந்தியாவிலேயே ஊழல்கள் மிகுந்த கட்சி அதிமுக என கூறினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையால் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய தாக்கமும் ஏற்பட போவதில்லை என்றும் அவர் கூறினார்.