டெல்லி: பிரதமர் மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சிக்கலில் இருந்து மீட்டது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடும் சவால்கள், சிக்கல்களுக்கு இடையே இந்திய பொருளாதாரத்தை மீட்டுள்ளோம் என்று பொருளாதாரம் குறித்து தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அதில், குடும்பத்தின் நலனை மட்டுமே மனதில்கொண்டு முந்தைய காங்கிரஸ் அரசு செயல்பட்டது. மன்மோகன் சிங் அரசில் பொருளாதார கொள்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று அவர் குற்றச்சாட்டினார்.