டெல்லி: பிரதமர் மோடி நன்கொடை வியாபாரம் செய்கிறார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி தொழிலதிபர்களிடம் நன்கொடை வசூல் செய்து வருகிறார். அமலாக்கத்துறை வழக்கு பதிந்த 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு ரூ.335 கோடி நன்கொடை அளித்துள்ளன. ம.பி. மது ஆலை உரிமையாளர்கள் ஜாமினில் வந்தவுடன் பாஜகவுக்கு நன்கொடை தரும் அளவுக்கு வெட்கமின்றி மோடி வியாபாரம் செய்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி நன்கொடை வியாபாரம் செய்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
previous post