மதுரை: ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. ரூ.1.7 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு. இ.சி.ஜி, எக்ஸ்ரே, பிரவச வார்டுகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ம.ம.க. மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.