மதுரை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைப்படி பணியில் சேர்ந்த அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற அமர்வு தடை விதித்தது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தது.