Thursday, May 16, 2024
Home » வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி உட்பட 4 ரயில் பயணிகள் மீட்பு

வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி உட்பட 4 ரயில் பயணிகள் மீட்பு

by Dhanush Kumar

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பெருமாள் (27),கர்ப்பிணி அனுசுயா மயில் (27), சேது லட்சுமி (54),ஒன்றரை வயது குழந்தை தாஸ் வருண் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி உட்பட 4 ரயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். 4 போரையும் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

எஞ்சிய பயணிகளுக்கு தரை வழியாகவும் ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவு வழங்கப்பட்டு வருகிறது என தகவல் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் சுமார் 800 பயணிகள் இருந்தனர்.

ஆனால், கனமழை காரணமாக அந்த ரயிலானது பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் ரயில் கனமழைக்கு நடுவே பாதியிலேயே நிறுத்தப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்த பயணிகள் நிலை குறித்து கவலை எழுந்தது. இதையடுத்து, ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக நேற்று 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து கொடுத்தனர்.

இதனிடையே, இந்த வழித்தடத்தில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து, ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்குச் சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி உட்பட 4 ரயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். 4 போரையும் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi