திருச்சி: திருச்சியை தலைமை இடமாக கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி வந்தது. இந்த நகை கடைகளில்நகைச்சீட்டுகள் மற்றும் பணம் முதலீடு செய்த வகையில் பல கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில், மேற்கண்ட கடைகளில் இருந்து முக்கிய ஆவணங்கள், ₹23.70 லட்சம் ரொக்கம், 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.