Tuesday, May 21, 2024
Home » தாம்பரம், போரூர், வியாசர்பாடி, அடையார், கே.கே.நகரில் நாளை 5 மணி நேரம் மின் நிறுத்தம்

தாம்பரம், போரூர், வியாசர்பாடி, அடையார், கே.கே.நகரில் நாளை 5 மணி நேரம் மின் நிறுத்தம்

by Arun Kumar

சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர், வியாசர்பாடி, அடையார், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 5 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர், வியாசர்பாடி, செங்குன்றம், ஐடி காரிடர், அடையார், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மேலும் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

* மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

* தாம்பரம்: சித்தாலப்பாக்கம் நூத்தஞ்சேரி, வேங்கை வாசல், வேலவன் நகர் ராஜகீழ்ப்பாக்கம் வெங்கடராமன் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர் பம்மல் அன்னை தெரசா தெரு, காமராஜபுரம், ஈ.பி.காலனி, சங்கர் நகர், ஆதாம் நகர், மூவேந்தர் நகர் கோவிலம்பாக்கம் வீரமணி நகர், நன்மங்கலம், மணிகண்டன் நகர், குளக்கரைத் தெரு, சத்யா நகர், குறிஞ்சி நகர், மேடவாக்கம் மெயின் ரோடு டி.என்.எஸ்.சி.பி நூக்கம்பாளையம், வள்ளுவர் நகர், விவேகானந்தர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்: ராபிட் நகர், சக்தி அவென்யு, குன்றத்தூர் ரோடு கோவூர் ஸ்ரீனிவாச நகர், மாதா நகர், தங்கம் அவென்யு, பாலாஜி நகர், கொள்ளசேரி, பூசணிகுளம், சுப்புலட்சுமி நகர், கோதண்டம் நகர் எஸ்.ஆர்.எம்.சி மகாலட்சுமி நகர், ஆபீசர் காலனி, திருமுருகன் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி: தொழிற்பேட்டை, மார்க்கெட் தெரு, ஈ.எச்.ரோடு, சாஸ்திரி நகர், வியாசர் நகர், புது நகர், காந்தி நகர், சத்யமூர்த்தி நகர், சாமியார் தோட்டம், சர்மா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

செங்குன்றம்: தீர்த்தக்காரன்பட்டு, பவானி நகர், நாரவாரிக்குப்பம், செங்குன்றம் பேருந்து நிலையம் பின்புறம்.

ஐடி காரிடர்: துரைப்பாக்கம் அண்ணா தெரு, எம்.ஜி.ஆர்.தெரு, ரங்கசாமி தெரு, ஈஸ்வரன் சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார்: ஆர்.ஏ.புரம், திருவான்மியூர், கொட்டிவாக்கம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும்.

கே.கே.நகர்: பி.டி.ராஜன் சாலை, அரும்பாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், கோடம்பாக்கம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

15 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi