சென்னை : 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை ஐகோர்ட் பதிவாளர் முன்னிலையில் மறு எண்ணிக்கை நடத்தி சரிபார்த்து அறிக்கை அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.